பாலை - தலைவன் கூற்று
பெறுவது இயையாது ஆயினும் உறுவது ஒன்று
உண்டுமன் வாழிய நெஞ்சே திண் தேர்க்
கை வள் ஓரி கானம் தீண்டி
எறிவளி கமழும் நெறிபடு கூந்தல்
மை ஈர் ஓதி மாஅயோள் வயின்
இன்றை அன்ன நட்பின் இந் நோய்
இறு முறை என ஒன்று இன்றி
மறுமை உலகத்து மன்னுதல் பெறினே.
-பரணர்
உறுவது - பயன்தருவது. வள் - வள்ளல். வளி - காற்று. ஓதி - கூந்தல். மா - கருமை. வயின் - இடத்தில். இறுதல் - அழிதல். மன்னுதல் - நிலைத்தல்.
தலைவியின் காதலை அறிந்த பெற்றோர், அவளை வீட்டில் சிறை வைத்து விட, தலைவன் தன் நெஞ்சுக்குச் சொன்னது.
தலைவியைப் பெறுவது இனி இயலாது
என்றாலும்
நம் காதலால், பயன் ஒன்று உண்டு நெஞ்சே!
வலிமையான தேர் கொண்ட
வள்ளல் ஓரியின் காட்டைக் கடந்து வரும்
காற்றைப் போல மணக்கும்
அடர்ந்த கருங்கூந்தல் கொண்ட
கரிய மேனியளின் நட்பினால் உண்டான
இந்தக் காதல் நோய்
இப்பிறப்போடு அழிந்து விடாது.
மறு பிறப்பிலும் தொடரும்.
ஓரி - கடையெழு வள்ளல்களில் ஒருவனான வல்வில் ஓரி.
Friday, May 26, 2023
குறுந்தொகை 199 - திண் தேர்க் கைவள் ஓரி
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment