மருதம் - தலைவி கூற்று
குக்கூ என்றது கோழி அதன் எதிர்
துட்கென்றன்று என் தூஉ நெஞ்சம்
தோள் தோய் காதலர்ப் பிரிக்கும்
வாள் போல் வைகறை வந்தன்றால் எனவே.
-அள்ளூர் நன்முல்லையார்
துட்கு - அச்சம். வைகறை - விடிகாலைப் பொழுது. தோய்தல் – தழுவுதல்.
குக்கூ என்று கூவியது கோழி.
அதைக்கேட்டு அச்சம் கொண்டது
என் தூய நெஞ்சம்.
என் தோள்களைத் தழுவியுள்ள
காதலரைப் பிரிக்கும்
வாள் போல
விடிகாலை வந்தது.

No comments:
Post a Comment