Friday, May 12, 2023

குறுந்தொகை 124 - தமியோர்க்கு மனை

பாலை - தோழி கூற்று

உமணர் சேர்ந்து கழிந்த மருங்கின் அகன்தலை
ஊர் பாழ்த்தன்ன ஓமையம் பெருங்காடு
இன்னா என்றிர் ஆயின்
இனியவோ பெரும தமியோர்க்கு மனையே.

-பாலை பாடிய பெருங்கடுங்கோ

உமணர் - உப்பு வணிகர். மருங்கு - பக்கம். அகன்தலை - அகன்ற இடம். ஓமை - பாலை நிலத்தில் வளரும் ஒருவகை மரம். தமியோர் - தனித்திருப்போர்.

பொருள் தேடிச் செல்ல முற்பட்ட தலைவன், செல்லும் வழியின் கொடுமையைக் காரணம் காட்டி, தலைவியை உடன் அழைத்துப் போக மறுத்த போது, தோழி சொன்னது.

உப்பு வணிகர் கூடிக் கடந்த இடம்
பாழான ஊர் போலத் தோன்றும்.
அது போன்ற
ஓமை மரக்காடுகள் நிறைந்த
பாழ்பட்ட பாலை நில வழி
கொடியது என்கிறீர்.
இனிமையானதோ, தலைவனே!
தனிமையில் இருப்பவர்க்கு வீடு.

No comments:

Post a Comment