குறிஞ்சி - தோழி கூற்று
அழியல் ஆயிழை அன்பு பெரிது உடையன்
பழியும் அஞ்சும் பய மலை நாடன்
நில்லாமையே நிலையிற்று ஆகலின்
நல் இசை வேட்ட நயனுடை நெஞ்சின்
கடப்பாட்டாளனுடைப் பொருள் போலத்
தங்குதற்கு உரியது அன்று நின்
அம் கலுழ் மேனிப் பாஅய பசப்பே.
-மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்
அழியல் - வருந்தாதே. ஆய் - அழகிய. இழை - அணிகலன். இசை - புகழ். நயன் - இரக்கம். கடப்பாடு - கடமை. கலுழ் - நிரம்பிய. பசப்பு - பசலை.
தலைவன் பொருள் தேடிச் சென்றிருக்க, அவன் பிரிவை எண்ணி வருந்தி இருந்த தலைவிக்கு, விரைவில் திரும்பி வருவான் என்று தோழி ஆறுதல் சொன்னது.
வருந்தாதே!
அழகிய அணிகலன்கள் அணிந்தவளே!
அன்பு நிறைந்தவன்.
பழிக்கு அஞ்சுபவன்.
பயன்தரும் மலைகள் சூழ்ந்த நாட்டினைச் சேர்ந்தவன்.
நில்லாமை ஒன்றே நிலையானது
என்பதை உணர்ந்து,
நிலைத்து நிற்கும் நற்புகழை விரும்பும்
இரக்கம் நிறைந்த நெஞ்சத்து
வள்ளலின் செல்வம் போல,
உன்னிடம் தங்காது.
உன் அழகு மேனியில் படர்ந்த பசலை.
பசப்பு - பசலை. பிரிவுத் துயரால், மேனிநிறம் வெளிறுதல்.
Friday, May 12, 2023
குறுந்தொகை 143 - நில்லாமையே நிலையிற்று
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment