குறிஞ்சி - தலைவன் கூற்று
யான் நயந்து உறைவோள் தேம்பாய் கூந்தல்
வளங்கெழு சோழர் உறந்தைப் பெருந்துறை
நுண்மணல் அறல் வார்ந்தன்ன
நன்னெறி யவ்வே நறுந் தண்ணியவே.
-இளங்கீரனார்
தேம் - இனிய. பாய் - தவழும். துறை – நீர்த்துறை. அறல் - கருமணல். வாரல் - நீளுதல். நெறிப்பு - மணல் சுவடு. நறுமை - மணம். தண்மை – குளிர்ச்சி.
என்னால் விரும்பப்பட்டு, என்னுடன் பழகும்
இப்பெண்ணின் தவழும் கூந்தல்,
வளம்மிக்க சோழர்தம் உறந்தை நகரத்து
ஆற்றங்கரையின் நுண்ணிய கருமணலை
வார்த்ததைப் போன்று
அலையலையாய்ப் படர்ந்தது.
மணம் மிக்கது.
குளிர்ச்சியானது.
உறந்தை – உறையூர். சோழர் தலைநகர். ஆறு – காவிரி.
Wednesday, May 10, 2023
குறுந்தொகை 116 - வளங்கெழு சோழர் உறந்தை
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment