முல்லை - தலைவி கூற்று
எல்லை கழிய முல்லை மலரக்
கதிர் சினம் தணிந்த கையறு மாலையும்
இர வரம்பாக நீந்தினம் ஆயின்
எவன் கொல் வாழி தோழி
கங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே.
-கங்குல் வெள்ளத்தார்.
எல்லை - கதிரவன். கையறு - ஏதும் செய்ய முடியாத நிலையிலான வருத்தம். இர -இரவு. வரம்பு - எல்லை. கங்குல் - இரவு.
தலைவன் பொருள் தேடிப் போயிருக்க, அவனது பிரிவால் வருத்தமுற்று இருந்த தலைவிக்கு ஆறுதல் கூறிய தோழியிடம், தலைவி சொன்னது.
பகல் கழிந்தது.
முல்லை மலர்ந்தது.
கதிரவன் சினம் தணிந்த
கையறு நிலையின் மாலைப்பொழுது.
அதனை
இரவை வரம்பாக எண்ணி
நீந்திக் கடந்தோம்.
ஆயினும், என்ன பயன்? தோழி!
இனி
இரவு என்னும் வெள்ளம்.
கடலை விடப் பெரியது.
Thursday, June 1, 2023
குறுந்தொகை 387 - கங்குல் வெள்ளம்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment