பாலை - தலைவி கூற்று
நமக்கு ஒன்று உரையார் ஆயினுந் தமக்கு ஒன்று
இன்னா இரவின் இன் துணை ஆகிய
படப்பை வேங்கைக்கு மறந்தனர் கொல்லோ
மறப்பரும் பணைத் தோள் மரீஇத்
துறத்தல் வல்லியோர் புள்வாய்த் தூதே.
-நக்கீரனார்.
இன்னா - துன்பம். படப்பை - தோட்டம். வேங்கை – ஒரு மரம். மறப்பரும் - மறக்க முடியாத. பணை - மூங்கில். மரீஇ - தழுவி. புள் - பறவை.
திருமணம் செய்வதாகச் சொல்லிச் சென்ற தலைவினிடமிருந்து சேதி எதுவும் வராத போது, தலைவி வருந்திச் சொன்னது.
நமக்கு ஒன்றும் சொல்லாவிட்டாலும் போகட்டும்.
தமக்கு துன்பம் தரும் இரவில்
(நாங்கள் சந்திக்க இடம் தந்து)
இனிய துணையாய் இருந்த
தோட்டத்து வேங்கை மரத்துக்கு
அனுப்ப மறந்தனரோ?
மறக்கவியலாத என் மூங்கில் தோள்களைத் தழுவிப்
பின்னர் பிரிந்து செல்ல வல்லவர்,
பறவை மூலம் தூது.
Thursday, June 1, 2023
குறுந்தொகை 266 - புள்வாய் தூது
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment