குறிஞ்சி - தலைவன் கூற்று
கேளிர் வாழியோ கேளிர் நாளும் என்
நெஞ்சு பிணிக் கொண்ட அம் சில் ஓதிப்
பெருந் தோள் குறுமகள் சிறு மெல் ஆகம்
ஒரு நாள் புணரப் புணரின்
அரை நாள் வாழ்க்கையும் வேண்டலென் யானே.
-நக்கீரனார்.
கேளிர் - நண்பர். பிணித்தல் - கட்டுதல். அம் - அழகிய. ஓதி - கூந்தல். ஆகம் - மேனி.
நண்பா, நீ வாழ்க!
நாளும் என் நெஞ்சத்தைக் கட்டிவைத்த
அழகிய கூந்தலையும்
பெருந்தோள்களையும் உடைய
அவளின் மென்மையான மேனியை
ஒரு நாள் கூடினால் போதும்
அதன்பின்
அரைநாள் வாழ்க்கையும் வேண்டேன் நான்.

No comments:
Post a Comment